Friday, December 23, 2005

வரலாறு :

இது வரை எழுதப்பட்ட, நம்மால் படிக்கப்பட்ட வரலாறுகள் அனைத்தும், அதிகாரவர்கத்தின் வரலாறே அன்றி மக்களுக்கானவை அல்ல.
வரலாற்றை நம்மிடை கொனர்ந்த அன்றைய (பழைய) ஊடகங்கள் அனைத்தும் ( கல்வெட்டுகள், பட்டயங்கள், இலக்கியங்கள் மற்றும் பல) அதிகாரவர்கத்தால் அனுமதிக்கபட்டவை, அங்கீகரிக்கப்பட்டவை மட்டுமே....
இன்றய சனநாயக(???) உலகின் ஊடகங்கள், அடுத்து வரும் தலைமுறைக்கு வரலாற்றை கொண்டுசெல்ல கடமைப்பட்டிருக்கின்றன. இன்றய சினிமா, தொ(ல்)லை காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள், தங்களது வரலாற்று கடமையை உணர்ந்திருக்கின்றனவா???
அனைத்து ஊடகங்களும் மக்களை அறிவிலியாக வைத்திருக்க முயற்சிக்கின்றன, விரும்புகின்றன. அவற்றின் அறிவிலி தனத்தால் சமகால நிகழ்வுகளில் உண்மையை அறியமுடியாமல் போய்விடுகிறது. சமகால வரலாற்றை அறியமுடியாமல் நாம் வருங்கால சந்ததியினருக்கு எத்தகைய வரலாற்றை அளிக்கபோகிறோம்???
எதிர்காலத்தின் வரலாற்றை இயற்றும் உரிமையை இந்த ஊடக சர்வதிகாரிகளிடம் விட்டுவிடுவதா???

வணக்கம்.....

நான் நம்பும் கருத்துக்கள், உண்மையனவையா?? எனக்கு தெரியவில்லை.
உண்மையென்றே நம்புகிறேன். உண்மையை தேடி கருத்தாடல்களுக்காக வலை பக்கம் வந்திருக்கிறேன். தோழர்கள் இங்கு நல்ல கருத்தாடல்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம் ( சிலவற்றை கட்டுடைக்கவும் செய்யலாம்) .......

/நன்றியுடன்....
ஷ்யாம்.

This page is powered by Blogger. Isn't yours?